Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா  Jan 12, 13
 
கீழச்சிவல்பட்டி RM.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவிற்கு இளையாத்தங்குடி ஜமீன்தார் ஆர்.சி.ராஜா தலைமை வகித்தார். ஆசிரியைகளால் சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நகர் காவல் துணை கண்காணிப்பாளர் மதுரைச்சாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கினார்.