Nagaratharonline.com
 
கப்பல் விபத்து:ராமேஸ்வரம் ரயில்கள் நிறுத்தம்  Jan 12, 13
 
பாம்பன் பாலத்தில் தரை தட்டிய கப்பல் கடல் சீற்றத்தால் ரயில் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டதால், இன்று அதிகாலையில் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

கப்பல் மோதியதில் ரயில் பாலத்தில் உள்ள இரும்பு ராடு சேத‌மடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து வந்த ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது.தரை தட்டிய கப்பல் இந்திய கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.