Nagaratharonline.com
 
குண்டர் தடுப்பு சட்டத்தில் சைக்கோ மருது கைது  Dec 29, 09
 
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் மகன் மருது என்ற மருதுபாண்டியன் (38). இவர் மனநோயாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 2 பெண்கள் உட்பட 5 பேரை கட்டையால் தாக்கி கொலை செய்தார். பொன்னமராவதி போலீசார் மருதுபாண்டியனை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சுகந்தி உத்தரவின்பேரில் கடந்த 27ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைத்தனர்.

source : Dinamalar 29/12/09