Nagaratharonline.com
 
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் 23-ந்தேதி கும்பாபிஷேகம்  Jan 10, 13
 
 
பாரிமுனை தம்பு செட்டித் தெருவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி நாளை (11-ந்தேதி) முதல் பல்வேறு பூர்வாங்க பூஜைகள், வேத பாராயணங்கள் ஆகியவை நடைபெற உள்ளன. 14-ந் தேதி முதல் யாக காலை பூஜைகள் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் ஆகிய பல்வேறு ஹோமங்களும், ஆகம விற்பன்னர்களால் நடத்தப்படுகிறது.