Nagaratharonline.com
 
நகரத்தார் ஆண்கள் குரு பீடத்தில் பட்டமளிப்பு விழா  Jan 10, 13
 
காரைக்குடி அருகே பாதரக்குடியில் உள்ள நகரத்தார் ஆண்கள் குரு பீடத்தில் ஆதீனகர்த்தர் ரவீந்திர சுவாமிகளின் ஜயந்தி மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில், கயிலைமணி நீலா இறைவணக்கம் பாடினார். தேனி பொறியியல் கல்லூரி நிறுவனர் உடையப்பச்செட்டியார் தலைமை வகித்துப் பேசினார். கவிஞர் அரு. சோம சுந்தரன் வரவேற்றுப் பேசினார்.
துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாசதேசிகர், பழநி பாதயாத்திரை குருநாதர் பழநியப்பச் செட்டியார், பேராசிரியர் வெங்கடாசலம், கவிஞர்கள் அப்பச்சி சபாபதி, ஆண்டியப்பன், தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் பேசினர். சக்கந்தி தொழிலதிபர் கயி. கண்ணப்பச் செட்டியாருக்கு அருள்பணி அண்ணல் என்ற பட்டம் வழங்கி பாதரக்குடி ஆதீனம் அருளுரை வழங்கினார். தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் நன்றி கூறினார்.