Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் ஆண்டுவிழா  Jan 6, 13
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் 21-வது ஆண்டுவிழா,06/01/2013 அன்று சென்னை அயனாவரத்தில் Dr.K.P மஹாலே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் PL.A.லட்சுமணன் அனைவரையும் வரவேற்றார், செயலாளர் MR. மகேஷ் பெரியகருப்பன் ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளர் P. பனையப்பன் நிதிநிலை அறிக்கை படித்தார்

கோவிலூர் மடாலயம் சீர்வளர்சீர் திரு .மெய்யப்ப சுவாமிகள் விழாவிற்கு தலைமை ஏற்று ஆசியுரை வழங்கினார்கள்.நகரத்தார்கள் ஒற்றுமையுடன் இருந்து, பல நல்ல செயல்கள் செய்யவேண்டும் என்று தமது உரையில் குறிப்பிட்டார்கள்.

நெற்குப்பை சேதுராமன் சாத்தப்பன் ( VPO, Scotia Bank, Mumbai ) Money management பற்றி தெளிவாக விவரித்து, எவ்வாறு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்கள்.

சிறந்த தொண்டு ஆற்றியதற்காக, வேகுப்பட்டி வள்ளல் கைலாயமணி திரு. முத்து பழனியப்பன் செட்டியார் அவர்களுக்கு பாராட்டும் நடைபெற்றது.

மன்றத்தின் நிர்வாகக் குழு மற்றும் காரியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவிக்காலம் நிறைவுறும் பொருட்டு கௌரவிக்கப்பட்டனர் .சுவையான விருந்து மூன்று வேளையும் பரிமாறப்பட்டது.

குழந்தைகளை மகிழ்வுக்கும் வகையில் magic Show, Puppet show, விளையாட்டு போட்டிகள், தனித்திறமை போட்டி ஆகியவை நடத்தப்பட்டன .விழா இறுதியில் துணைச் செயலாளர் PR. சுந்தர் நன்றி கூறினார்.

ஏகமனதாக 2013-2014 ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக L.P.KR.RM. ராமநாதன் அவர்களும் துணைத்தலைவராக ராம்குமார் சிங்காரம் அவர்களும் செயலாளராக PR. சுந்தர் அவர்களும் துணைச் செயலாளர்கள் S.ஸ்ரீனிவாசன், M S. செல்வநாதன், P. பனையப்பன் ஆகியோர்களும் பொருளாளராக M. வெள்ளையன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Editor, Nagarathargateway.com