Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ் தேவை  Dec 29, 09
 
புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மானாமதுரை முதல் பிள்ளையார்பட்டிக்கு போக்கு வரத்து கழகம் சிறப்பு பஸ் இயக்கவேண்டும். புத்தாண்டு அன்று அதிகாலை முதலே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவர். பக்தர்களின்
வசதிக்கென ஆண்டுதோறும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவை சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மதுரையை மையமாக வைத்து மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பிள்ளையார்பட்டி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
கடந்த ஆண்டு பக்தர்கள் இரு சக்கர வாகனம், வேன்களில் சென்று வந்தனர். இதில் காலதாமதம் ஆவதால் அதிகாலையிலேயே சாமி தரிசனத்திற்கு சென்று வருவதற்குள் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மானாமதுரை பக்தர்களின் வசதிக்கென அங்கிருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மானாமதுரையை சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ""பிள்ளையார்பட்டிக்கு, இங்கிருந்து சிவகங்கை, திருப்புத்தூர் வரை சென்று அங்கிருந்து காரைக்குடி நோக்கி செல்லும் பஸ்களில் மாறிச்செல்லவேண்டியுள்ளது. இதில், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இங்கிருந்து அதிகாலை முதலே சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும்,'' என்றார்.


source ; Dinamalar 29/12/09