Nagaratharonline.com
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் அஷ்டமி திதி வேள்வி  Jan 5, 13
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் மகா பால சொர்ணாகர்ஷன பைரவருக்கு 108வது தேய்பிறை அஷ்டமி திதி வேள்வி நடந்தது.
நேற்று முன் தினம்,அதிகாலை கோமாதா பூஜை நடந்தது. மெய்ஞானபுரிஸ்வரர்,பாகம்பிரியாள், சொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சர்வ அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் திருவாசகம் ஓதி வழிபட்டனர்.

பின்னர் பைரவர் சன்னதிக்கு முன் குணசேகர சுவாமிகள் (எ) காகபுஜண்ட மகரிஷி சுவாமி வேள்வியை துவக்கினார்.தொடர்ந்து பைரவருக்கு 108 இளநீர் அபிஷேகம் நடந்து, சர்வ அலங்காரத்திற்கு பின் மகா தீபாராதனை நடந்தது.
நேற்று காலை பைரவர் சன்னதியில் மலர் அஞ்சலியும், தீபாராதனையும் நடந்தது.சிவாச்சாரியார்களால்,லட்சார்ச்சனை நடந்தது.