Nagaratharonline.com
 
பழனியில் 21–ந்தேதி தைப்பூசத் திருவிழா : பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொட ங்கியது  Jan 3, 13
 
பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா வருகிற 21–ந்தேதி(திங்கட் கிழமை) தொடங்குகிறது.

அன்று பழனி கோவிலின் உப கோவி லான பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று பழனி மலைக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிச னம் நடைபெறும். உச்சிக்கால பூஜையின் போது காப்பு கட்டு தல் நிகழ்ச்சி நடைபெறும்.

கடும் பனியையும் பொருட் படுத்தாது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.