Nagaratharonline.com
 
வாடகை கட்டடத்தில் வட்டாட்சியர் அலுவலகம்: பொதுமக்கள் அவதி  Jan 1, 13
 
பொன்னமராவதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருமயம் வட்டத்தில் இருந்த பொன்னமராவதி 2009-ல் தனி வட்டமாக பிரிக்கப்பட்டு, வாடகை கட்டடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த அலுவலகத்தில் இட நெருக்கடியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பிகே.வைரமுத்து முயற்சியால், பொன்னமராவதி கொப்பனாபட்டி சாலையில் ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் அந்த இடத்தல் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை. எனவே தற்போதைய மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவாய்துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்து வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.