Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு சிறப்பு பூஜை  Dec 30, 12
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, (ஜன.,1)நாளை வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறக்கப்பட்டு திருவனந்தாள், திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜைகள் துவங்கும். காலை சந்தி, உச்சி காலம்,சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் நடை
பெறும். பகல் 1 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, கற்பக விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்
.
நிர்வாக அறங்காவலர்கள் வலையப்பட்டி ஏ.ராமனாதன், காரைக்குடி எம்.கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.