Nagaratharonline.com
 
நெற்குப்பையில் வளர்ச்சி பணிக்கு ரூ.1.12 கோடி  Dec 30, 12
 
நெற்குப்பை பேரூராட்சியில் ரூ. 1.12 கோடியில், ரோடு, ஊரணி மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளதென, தலைவர் சஞ்சீவி தெரிவித்தார். அவர் கூறியதாவது :

நபார்டு, ஊரணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில், 2 வது வார்டு நல்லூரணியில் கரை தடுப்புச் சுவர் கட்டுதல்,

ரோடு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சத்தில், 1வது வார்டு பொட்டவெளிக்கலம் தார்ச்சாலை புதுப்பித்தல்,

ரூ.29.4 லட்சத்தில் 10 வது வார்டு பூசணிக்களம் ரோடு மேம்படுத்துதல் பணிகள் நடத்தப்படும். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.