Nagaratharonline.com
 
கணி​யன் பூங்​குன்​ற​னார் நினைவு மண்​ட​பம் மகி​பா​லன்​பட்​டி​யில் உயர்​நி​லைக் குழு ஆய்வு  Dec 27, 09
 
சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே மகி​பா​லன்​பட்​டி​யில் சங்க காலப் புல​வர் கணி​யன் பூங்​குன்​ற​னார் நினைவு மண்​ட​பம் மற்​றும் சிலை அமைக்க,​​ அரசு நிய​மித்த உயர்​நி​லைக் குழு​வி​னர் சனிக்​கி​ழமை ஆய்வு செய்​த​னர்.​

​ திருப்​பத்​தூரி​லி​ருந்து பொன்​ன​ம​ரா​வதி செல்​லும் சாலை​யில் 9 கி.மீ.​ தொலை​வில் மகி​பா​லன்​பட்டி உள்​ளது.​

சங்க காலப் புல​வர் கணி​யன் பூங்​குன்​ற​னார் இங்கு வாழ்ந்​த​வர் என்​ப​தால்,​​ அவ​ருக்கு நினைவு மண்​ட​பம் மற்​றும் சிலை அமைக்க தமி​ழக முதல்​வர் உத்​த​ர​விட்​டார்.​

​ அதைத் தொடர்ந்து செய்தி -​ மக்​கள் தொடர்​புத் துறை அமைச்​சர் பரிதி இளம்​வ​ழுதி தலை​மை​யில் உயர்​நி​லைக் குழு​வி​னர் மகி​பா​லன்​பட்​டி​யில் ஆய்வு செய்​த​னர்.​

குட​வ​ரைக் கோயில் அமைந்​துள்ள பகு​தி​யைப் பார்​வை​யிட்டு,​​ அதில் உள்ள மலைக்​குன்​றில் நினைவு மண்​ட​பம் அமைப்​பது குறித்து விவா​தித்​த​னர்.​

​ பின்​னர் குன்​றக்​குடி மடத்​தில் நடை​பெற்ற ஆலோ​ச​னைக் கூட்​டத்​தில் அமைச்​சர்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார்,​​ கவி​ஞர் அப்​துல் ரஹ்​மான்,​​ இளை​யான்​குடி சட்​ட​மன்​றத் தொகுதி உறுப்​பி​னர் மதி​ய​ர​சன்,​​ மாவட்ட ஆட்​சி​யர் மகே​சன் காசி​ரா​ஜன்,​​ செய்​தித் துறை இயக்​கு​னர் சி.காம​ராஜ்,​​ தமிழ் வளர்ச்​சித் துறை இயக்​கு​னர் எழி​ல​ரசு,​​ சிற்​பக் கலை கல்​லூரி முதல்​வர் குண​சே​க​ரன்,​​ தமி​ழண்​ணல் பா.நமச்​சி​வா​யம்,​​ பேரா​சி​ரி​யர் பழநி,​​ அய்க்​கண் புல​வர் குரு​சாமி,​​ முத்​தப்​பன்,​​ டாக்​டர் நோயல்,​​ மணி,​​ தியா​க​ரா​ஜன் ஆகி​யோர் கலந்து கொண்டு நினைவு மண்​ட​பம்,​​ சிலை வடி​வம் பற்​றிய தங்​க​ளது கருத்​து​களை தெரி​வித்​த​னர்.​

​ நிறை​வா​கப் பேசிய அமைச்​சர்,​​ அறி​ஞர் பெரு​மக்​க​ளின் கரு​த​துக்​கள் பதிவு செய​யப்​பட்​டுள்​ளது.​

முதல்​வ​ரின் பார்​வைக்கு வைக்​கப்​பட்டு,​​ அதன் பின் இறுதி வடி​வம் கொடுக்​கப்​ப​டும் என்​றார்.


source : Dinamani 28/12/09