Nagaratharonline.com
 
நச்சாந்துபட்டி மீனாள்ஆச்சி கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை  Dec 28, 12
 
நச்சாந்துபட்டியைச் சேர்ந்தவர் மீனாள்ஆச்சி (80). கடந்த 23.3.2011-ல் வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சசிகுமார் (27) என்பவரைக் கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாம்பசிவம், எதிரி சசிகுமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக்

கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.