Nagaratharonline.com
 
புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்டில்...துர்நாற்றம்!  Dec 26, 12
 
பஸ்ஸ்டாண்டுக்குள் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், பயணிகள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ்ஸ்டாண்ட் பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது.இவை தவிர கட்டண கழிப்பறையிலிருந்து, மனித கழிவுகள் வெளியேற வசதியாக போடப்பட்டுள்ள வடிகால் தூர்த்துவிட்டதால், பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள கழிவுநீர் ஓடையில் மனித கழிவுகள் தேங்கி அருவருப்பாக காட்சியளிக்கிறது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் பயணிகளை மட்டுமின்றி, பஸ்ஸ்டாண்டுக்குள் கடை வைத்துள்ள வியாபாரிகளையும் நிலைகுலையச் செய்து வருகிறது.

நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகிவரும் நகராட்சி நிர்வாகம், புதிய பஸ்ஸ்டாண்டின் அவலநிலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.