Nagaratharonline.com
 
குன்றத்தூர், வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு  Dec 25, 12
 
ஜன.1ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு அன்று பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலவருக்கு அதிகாலையில் 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. ஜன 1-ம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணயத்தில் அலங்காரமும் பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவசம் அலங்காரமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரமும் நடைபெற உள்ளது.

குன்றத்தூர் மலைக்கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு டிச.31ம் தேதி இரவு 12 மணிக்கு மகா அபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனை தொடர் தரிசனம் வழிபாடு நடைபெற உள்ளது.