Nagaratharonline.com
 
பாலம் உடைந்து பல நாட்களாச்சு - பராமரிக்க ஆட்களே இல்லை  Dec 19, 12
 
பாகனேரியிலிருந்து காளையார்மங்களம் செல்லும் ரோட்டில் செக்கடி கண்மாய் பாலம் கடந்த 5 தேதி இடிந்து போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது.

பாலம் உடைந்து 15 நாட்களாகியும் ஒன்றிய நிர்வாகத்திலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாணவர்கள் சைக்கிள்களை கண்மாய் வழியாக தூக்கி செல்கின்றனர்.
கண்டுப்பட்டி,நாட்டரசன்கோட்டைகளிலிருந்து வருபவர்கள் சாலை தடைபட்டுள்ளது குறித்து எந்த அறிவிப்புகளும் இல்லாததால் பாலம் அருகே வந்துவிட்டு மறுபடியும் 10 கி.மீ தூரம் திரும்பி செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாற்று மண் பாதையாவது அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.