Nagaratharonline.com
 
கல்லல் ரயில்வே ஸ்டேஷன் அருகே மதுக்கடை குடிகாரர்களால் தொல்லை  Dec 17, 12
 
கல்லல் ரயில்வே ஸ்டேசன் அருகே டாஸ்மார்க் கடை உள்ளது.
கல்லல்-காளையார்கோவில் ரோட்டில் அமைந்துள்ளதால் அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது.ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சிலர் குடிப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.காலை,மாலை நேரத்தில் ரயிலில் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மதுக்கடையை கடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

ஸ்டேசனுக்கும்-ரயில்கேட்டுக்கும் நடுவில் மதுக்கடை அமைந்திருப்பதால் சிலர் குடித்து விட்டு ரயில்வே ஸ்டேசனில் வந்து தகராறு செய்வதும்,சில நேரங்களில் போதையில் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பதும்,ரயில்வே ஊழியர்கள் அவர்களை அப்புறப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த வாரம் இந்த கடையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் மோதி ஒருவர் இறந்துள்ளார். இதுபோல வேறு விபத்துக்கள் நடக்கும் முன் ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.