Nagaratharonline.com
 
காரைக்குடியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்  Dec 11, 12
 
காரைக்குடி தாலுகா, கழனிவாசல் குரூப் புல எண் 65-ல் உள்ள மனையிடங்களுக்கு 2009-ல் தேவகோட்டை கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட பத்திரப் பதிவுக்கான தடையாணையை நீக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

தேவகோட்டை கோட்டாட்சியர் அந்தப் புல எண்களில் உள்ள வீடுகளுக்கும், மனையிடங்களுக்கும் பத்திரப்பதிவுக்குத் தடை செய்திருப்பதால் தங்களது தேவைகளுக்கு சொத்துக்களை விற்க முடியவில்லை. அப்பகுதியில் சொத்து வாங்க முடிவு செய்திருப்பவர்கள் பத்திரப் பதிவுக்கு தடை இருப்பதால் வாங்கத் தயங்குகின்றனர். இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந் நிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய், பத்திரப் பதிவுத் துறை நிர்வாகம் ஆகியோரது கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல் கட்டமாக, இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.