Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் ரோடு இல்லாததால்பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்  Dec 10, 12
 
கண்டவராயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடம், கூட்டுறவு சங்கத்திற்கு செல்ல இணைப்பு ரோடு இல்லாத நிலை உள்ளது.
கண்டவராயன்பட்டியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு, 5 லட்ச ரூபாய் செலவில்
துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கக் கட்டடமும் உள்ளது.
அதனருகில் நெல் சேமிப்புக் கிடங்கும் கட்டப்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு செல்ல மெயின் ரோட்டிலிருந்து இணைப்புச்சாலை இல்லை.

தற்போது சாதாரண மண் ரோடு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மண் ரோடு போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை.

அதன் மூலம் பயன்படாமல் உள்ள அந்தக் கட்டிடங்களில் துணை சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கம் செயல்பட வழி பிறக்கும்.