Nagaratharonline.com
 
ஓய்வறையான மதகுபட்டி பஸ்ஸ்டாண்ட் : ரூ.10 லட்சம் நிதி வீணானது  Dec 9, 12
 
மதகுபட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கும்,இதர தேவைகளுக்கும் தினமும் மதகுபட்டி வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக இந்த பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாத நிலையில்,10 லட்ச ரூபாய் செலவில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2009ம் ஆண்டு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. தற்பொழுது முழுமையாக பஸ ஸ்டாண்ட் கட்டப்பட்ட பின்னரும் சுற்று சுவர்,மின்வேலைகள் நடைபெறாமல் உள்ளதால் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படாமல் உள்ளது.

இங்குள்ளவர்களின் ஓய்வு எடுக்கும் இடமாக மாறியுள்ளது.4 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பணியை விரைவாக முடித்து பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.