Nagaratharonline.com
 
சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி:  Dec 4, 12
 
சென்னையில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இம் மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை செய்து வருகிறது.