Nagaratharonline.com
 
காஸ் சிலிண்டர் விண்ணப்பம் :வீடுகளுக்கே வரும் ஏஜன்சி  Dec 3, 12
 
காஸ் ஏஜன்சிகளில், சிலிண்டர் பயனீட்டாளர்கள் நேரடியாக சென்று, கே.ஒய்.சி., விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என ஏஜன்சியினர் அறிவித்தனர்.

சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் ஏஜன்சிகளில் கூட்டம் அதிகரித்தது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி, விண்ணப்பத்தை ஏஜன்சியினர் பயனீட்டாளர்களுக்கு, இலவசமாக வழங்காமல், ரூ.5 கட்டணம் வசூலித்தனர். காஸ் பயனீட்டாளர்கள் ஐ.ஓ.சி.,க்கு புகார் தெரிவித்தனர். ஐ.ஓ.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" "வாடிக்கையாளர் அறிதல்' விண்ணப்பத்துடன், ஏஜன்சியினர் வீடு வீடாக வருவர். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்,சிலிண்டர் புத்தகம், அடையாள சான்று நகலை வழங்க வேண்டும். இதற்காக,பணம் தர தேவையில்லை,'' என்றார்.