Nagaratharonline.com
 
காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் ஓட்டம்  Nov 27, 12
 
காரைக்குடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில்,பெட்டி எண்களை குறிக்கும் சிக்னலை செயல்பட வைக்க, ஊழியர் இல்லாத நிலையில், அதன்பூட்டிகிடக்கிறது.சென்னை,திருச்சி,மானாமதுரை,மன்னார்குடிக்கு தினமும், வாரணாசி, புவனேஸ்வருக்கு வாராந்திர ரயில்களும் காரைக்குடி வழியாக இயக்கப்படு கின்றன.

இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.ரயில்கள் நின்றவுடன், எந்த பெட்டி எந்த இடத்தில், நிற்கும் என்ற அறிவிப்பை காட்டும், எலக்ட்ரானிக் போர்டை செயல்பட வைக்கும், சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படுவதில்லை. அந்த அறை பூட்டியே கிடக்கிறது. போர்டு செயல்படாத நிலையில், ரயில் நின்றவுடன், பயணிகள் குழந்தை, முதியவர்களுடனும் தங்களுக்குரிய பெட்டியை தேடி ஓடும் நிலை உள்ளது.அறிவிப்பாளர் இல்லாததால், ரயில் வரும் அறிவிப்பை பயணிகள் தெரிந்து கொள்ள முடிவதில்லை