Nagaratharonline.com
 
காரைக்குடியில் கொள்ளையர்கள் அட்டகாசம்: ஒரேநாள் இரவில் மீண்டும் 10 கடைகளில் கொள்ளை  Nov 23, 12
 
காரைக்குடியில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்கள், வர்த்தக நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாள் இரவில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி கழனிவாசல் புதுரோடு பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை, பலசரக்கு கடை, முடியரசனார் சாலையில் 2 பலசரக்கு கடைகள், கீழத்தெருவில் 2 பலசரக்கு கடைகள், அண்ணாசாலை அருகே ஸ்வீட் ஸ்டால் போன்றவற்றின் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கலாம் என தெரிகிறது.