Nagaratharonline.com
 
ஓ.சிறுவயல் : குப்பைக்கு நடுவில் மாணவர்கள்  Nov 23, 12
 
ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,குப்பையின் நடுவில்,மாணவர்கள் படிக்க வேண்டிய அவலம் உள்ளது.காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் அரசு மேல்நிலை பள்ளியில், 500க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். சுற்று சுவர் இல்லாத நிலையில், எதற்கும் பயன் இல்லாத, நுழைவு வாயிலுக்கு கேட் அமைத்துள்ளனர். சுற்று சுவர் இல்லாததால், கால்நடைகளின் புகலிடமாக மாறியுள்ளது. காலையில் வகுப்பறைக்கு வெளியே, குப்பை, கால்நடைகளில் கழிவு தேங்கி கிடக்கிறது. தேர்வு நேரங்களில், வகுப்புக்கு வெளியே உட்கார்ந்து மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு வகுப்பறையின் முன்பும், தேங்கி கிடக்கும் குப்பைக்கு நடுவே படிக்க வேண்டிய அவலத்தில் உள்ளனர். சுத்தமாக இருக்க வேண்டும், என்ற போர்டு அருகேயே சுத்தம் இல்லை. துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்து பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.