Nagaratharonline.com
 
கொன்​னைப்​பட்​டி​யில் இல​வச மருத்​துவ முகாம்  Dec 26, 09
 
பொன்​ன​ம​ரா​வதி அரு​கே​யுள்ள கொன்​னைப்​பட்டி ஊராட்​சி​யில் மேலைச்​சி​வ​புரி கணே​சர் கலை,​​ அறி​வி​யில் கல்​லூரி நாட்டு நலப்​ப​ணித் திட்​டம்,​​ பொன்​ன​ம​ரா​வதி துர்க்கா மருத்​து​வ​மனை,​​ தமி​ழர் பண்​பாட்​டுச் சேவை மையம்,​​ அம்​மா​பட்டி சுப்​பையா பாக்​கி​யம் அறக்​கட்​டளை,​​ கொன்​னைப்​பட்டி ஊராட்சி மன்​றம் ஆகி​யன இணைந்து பழ​னி​யாண்​ட​வர் திரு​மண மண்​ட​பத்​தில் இல​வச பொது மருத்​துவ முகாமை வெள்​ளிக்​கி​ழமை நடத்​தின.​

​ ​ முகா​மிற்கு கல்​லூரி முதல்​வர் தா.​ மணி தலைமை வகித்​தார்.​ பொன்​ன​ம​ரா​வதி தமிழ்​நாடு அரசு போக்​கு​வ​ரத்​துக் கழக கிளை பணி​மனை ​ உத​விப் பொறி​யா​ளர் அ.​ சோம​சுந்​த​ரம்,​​ தமி​ழர் பண்​பாட்​டுச் சேவை மைய நிர்​வா​கிள் சி.தியா​க​ரா​ஜன்,​​ கா.​ செந்​தில்​நா​தன்,​​ சுப்​பையா பாக்​கி​யம் அறக்​கட்​ட​ளைத் தலை​வர் பி.​ சரோஜா,​​ வாராப்​பூர் ஸ்டெப் பவுண்​டே​சன் பசு​மா​பா​ரதி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

​ ​ முகாமை கொன்​னைப்​பட்டி ஊராட்​சித் தலை​வர் அழகி வெள்​ளைச்​சாமி தொடக்​கி​வத்​தார்.​

​ ​ பொன்​ன​ம​ரா​வதி துர்க்கா மருத்​து​வ​மனை மருத்​து​வக் குழு​வி​னர் டாக்​டர் எஸ்.​ செல்​வக்​கு​மார்,​​ பி.​ முத்​துக்​கு​மார் மற்​றும் க.​ ரவிச்​சந்​தி​ரன்,​​ க.​ ஆறு​மு​கம் ஆகி​யோர் பய​னா​ளி​கள் 257 பேருக்​குச் சிகிச்சை அளித்து,​​ இல​வச மருந்து,​​ மாத்​தி​ரை​கள் வழங்​கி​னர்.​

source : Dinamani 26/12/09