Nagaratharonline.com
 
இரவில் பாகனேரிக்குவர மறுக்கும் அரசு பஸ்  Nov 19, 12
 
சிவகங்கையிலிருந்து பாகனேரி வழியாக காரைக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ் தினமும் 3 தடவை வந்து செல்கிறது. காரைக்குடியில் இரவு 9 மணிக்கு புறப்படும் பஸ் மட்டும் பாகனேரி வராமல் சொக்கநாதபுரம் வழியாக நேரடியாக சிவகங்கை செல்வதால் இரவு நேரத்தில் இப் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ் வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

பாகனேரி,கொட்டாப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் தேவைக்கு காரைக்குடி செல்வதால் வருவதற்கு பஸ் வசதியில்லாமல் நடந்தே வரும் நிலை காணப்படுகிறது.இப்பகுதி மக்கள்
காரைக்குடியில் 7 மணிக்கு பஸ்சை விட்டால் வேறு பஸ் இல்லாமல் கல்லலிருந்து அதிக செலவு செய்து ஆட்டோவில் வரவேண்டியுள்ளது.இரவு நேர அரசு பஸ் வழக்கம் போல் பாகனேரி வழியாக செல்வதற்கு போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.