Nagaratharonline.com
 
பொன்னமராவதி வட்டத்தில் 42 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்  Nov 3, 12
 
பொன்னமராவதி வட்டத்தில் 42 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், டெங்கு விழிப்புணர்வைக் கூட்டப் பொருள்களாகக் கொண்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தனி வட்டாட்சியர் தெய்வானை, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேகுப்பட்டியில் ஊராட்சித் தலைவர் ராம. அபிராமி தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.