Nagaratharonline.com
 
பாகனேரி-நடராஜபுரம் ரோட்டில்பாலம் உடையும் அபாயம்  Nov 2, 12
 
பாகனேரியிலிருந்து - நடராஜபுரம் செல்லும் ரோட்டில் செக்கடி கண்மாய் கரையில் பாலம் உடையும் நிலையில் உள்ளது.பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள கற்கள் பெயர்ந்து நடுவே ஓட்டை விழுந்துள்ளது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக மரக்கிளைகள் வெட்டி பாலத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தின் வழியாகத் தான் இலந்தமங்களம், காளையார்மங்களம்,மாங்காட்டுப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தினமும் பாகனேரி வந்து செல்கின்றனர்.பாகனேரியிலிருந்து சிவகங்கை செல்வதற்கும் இந்த பாலத்தின் வழியாகத்தான்
செல்ல வேண்டும். பட்டமங்களம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கண்டுப்பட்டி,நாட்டரசன்கோட்டைக்கு செல்வதற்கும் இந்த பாலம் அதிகம் பயன்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.