Nagaratharonline.com
 
கணி​யன் பூங்​குன்​ற​னா​ருக்கு மணி​மண்​ட​பம்:​ மகி​பா​லன்​பட்​டிக்கு அரசு குழு இன்று வருகை  Dec 26, 09
 
திருப்​பத்​தூர் அருகே கணி​யன் பூங்​குன்​ற​னா​ருக்கு மணி​மண்​ட​பம் கட்​டப்​பட உள்ள இடத்தை தமி​ழக அர​சின் உயர்​மட்​டக் குழு​வி​னர் இன்று பார்​வை​யி​டு​கின்​ற​னர்.​ ​

​ சிவ​கங்கை ​ மாவட்​டம் திருப்​பத்​தூர் வட்​டம் மகி​பா​லன்​பட்​டி​யில் பிறந்த சங்க காலப் புல​வர் கணி​யன் பூங்​குன்​ற​னா​ரு​ககு நினை​வு​மண்​ட​பம் அமைக்க தமி​ழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.​ இதற்​கான இடத்தை தேர்வு செய்​வ​தற்​காக செய்​தித்​துறை அமைச்​சர் பரிதி இளம் வழுதி தலை​மை​யி​லான குழு​வி​னர் சனிக்​கி​ழமை காலை 10 மணி​ய​ள​வில் மகி​பா​லன்​பட்​டிக்கு வரு​கின்​ற​னர்.​ இடத்தை பார்​வை​யிட்ட பிறகு குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் மடத்​தில் இக்​கு​ழு​வி​னர் ஆலோ​சனை நடத்த உள்​ள​னர்.​

​ குழு​வில் கவிக்கோ அப்​துல் ரகு​மான்,​​ ​ சிலம்​பொலி ​ செல்​லப்​பன்,​​ தமி​ழண்​ணல் ராம பெரி​ய​க​ருப்​பன்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார்,​பாவ​லர் மணி ஆ.பழனி,​​ தமிழ் வளர்ச்​சித்​துறை இய்​க​கு​நர் எழில் அரசு,​​ புல​வர் நமச்​சி​வா​யம்,​​ செய்​தித்​துறை செய​லர் முத்​து​சாமி,​​ இயக்​கு​நர் காம​ராஜ் ஆகி​யோர் இடம் பெற்​றுள்​ள​னர்.​ இத்​த​க​வல் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​லக செய்​திக்​கு​றிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

source : Dinamani 26/12/09