Nagaratharonline.com
 
விராமதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பிரசாரம்  Oct 31, 12
 
விராமதி ஊராட்சி மற்றும் ட்ரூபா தொண்டு நிறுவனம் இணைந்து டெங்கு நோய் தடுப்புப் பிரசாரம் மேற்கொண்டன.

விராமதியில் நடைபெற்ற இப்பிரசாரப் பேரணிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரவள்ளி மாணிக்கம் தலைமை வகித்தார்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏ.டி.எஸ். கொசு எப்படி உருவாகிறது, இந்நோயின் அறிகுறிகள், நோயின் நிலைகள், டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் செய்ய வேண்டியது, காய்ச்சல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.