Nagaratharonline.com
 
ஓ.சிறுவயல் - ஆத்தங்குடி சாலை ; உயிர் பயத்தில் பயணிகள்  Oct 29, 12
 
ஓ.சிறுவயலிலிருந்து - ஆத்தங்குடி செல்லும் சாலை மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆத்தங்குடி பழமையான வீடுகளுக்கும், டைல்ஸ்-க்கும் பெயர்போனது. இதனால், காரைக்குடிக்கு வருபவர்கள் ஆத்தங்குடிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு செல்கின்றனர். ஓ.சிறுவயலிருந்து செல்லும்போது, திருவேலங்குடி கண்மாய் அருகே ரோடு கடந்த எட்டு மாதமாக மோசமாக உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. பலவான்குடி, ஆத்தங்குடி, கோனாப்பட்டு, சூரக்குடிக்கு இந்த ரோடு வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், டூவீலர்களில் செல்வோர் விபத்து அபாயத்தில் உள்ளனர்.

பஸ்சில் செல்லும்போது, கண்மாய்க்குள் கவிழும் நிலையில், பஸ் ஆடுகிறது.--- உயிர் பயத்தில் நாள்தோறும் பயணம் ----

source : Dinamalar