Nagaratharonline.com
 
பாகனேரியில் வங்கி பணி பாதிப்பு  Oct 27, 12
 
:பாகனேரி ஐ.ஒ.,பியில் உள்ள டவரில் இடி தாக்கியதில் இன்டர்நெட் இணைப்பு,யூ.பி.எஸ்., பேட்டரிகள் சேதமடைந்து வங்கிப்பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.கடந்த ஒரு மாதமாக வாடகை ஜெனரேட்டர் மூலம் பணிகள் நடைபெறுவதால் டீசல் செலவு கணக்கை வைத்து 11 மணிக்கே வாடிக்கையாளர் சேவை தொடங்கப்பட்டு 3 மணி நேரத்தில் நிறுத்தப்படுகிறது.ஜெனரேட்டர் ஆபரேட்டர் வரவில்லை என்றால் பணி தொடங்க மேலும் காலதாமதமாகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சரியான சேவை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.இங்கு நிரந்தரமாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது போன்ற கிராமப்புற வங்கிகளில் அதிகளவில் செலவு செய்து ஜெனரேட்டர் அமைக்கப்படுவதில்லை.சேதமடைந்த பேட்டரிகளை இதற்கென உள்ள குழுவினர் பார்வையிட்ட பின்னரே பேட்டரிகள் அமைக்கப்படும்.அதுவரை வாடகை ஜெனரேட்டர் மூலமாகவே சேவை தொடரும்,என்றார்