Nagaratharonline.com
 
பாகனேரி-மதுரை தனியார் பஸ்நிறுத்தத்தால் மக்கள் தவிப்பு  Oct 25, 12
 
பாகனேரியிலிருந்து மதுரைக்கு பி.ஆர்.பி.,பஸ் மதகுபட்டி,அலவாக்கோட்டை வழியாக காலை 9 மணி,1.30,6 என மூன்று தடவை இயக்கப்பட்டது.இந்த பஸ் கடந்த ஒரு மாதமாக முடக்கப்பட்டுள்ளது.

பாகனேரி,காடனேரி,நகரம்பட்டி,அழகாபுரி உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்தவர்கள்,பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

மாலையில் 6 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டதால்,இரவு 7.30 மணி வரை மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.மக்களின் அன்றாட தேவைக்கு அதிகம் பயன்பட்ட இந்த வழித்தடத்திலுள்ள பஸ் முடக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதமாக மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வழித்தடத்தில் அரசு பஸ்
இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.