Nagaratharonline.com
 
தேவகோட்டை- ஓரியூருக்கு தனியார் பஸ்கள் நிறுத்தம்; 400 கிராம மக்கள் அவதி  Dec 24, 09
 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து ஓரியூருக்கு பிரதான சாலை உள்ளது. சுமார் 35 கிலோ மீட்டர் உள்ள இந்த சாலை புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரை சாலையை இணைக்கிறது.

இதனால் இந்த சாலையில் அதிக போக்குவரத்து காணப்படும். இந்த வழியாக ஓரியூருக்கு ஏராளமான தனியார் பஸ்கள் சென்று வந்தன. இதனால் 400 கிராம மக்கள் பயன் பெற்று வந்தனர்.

ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தேவகோட்டை- ஓரியூருக்கு செல்லும் 2 தனியார் பஸ்களும், அரசு பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பஸ்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சென்று வந்தது. பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் 400 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து ஆலோசனை கூட்டம் பழங்குளம் பஞ்சாயத்து தலைவர் பிரேமா கருப்¬யா தலைமையில் நடந்தது. பஸ்கள் மீண்டும் இயக்கப்படாவிட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

source : Maalai malar 24/12/09