Nagaratharonline.com
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா  Oct 23, 12
 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் 40-ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழா கடந்த அக்.15-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கியது.அன்றைய தினம் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்,சிவலிங்க பூஜை அலங்காரம்,ஆண்டாள் அலங்காரம் உள்ளிட்ட அலங்காரமும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.மேலும் தினமும் நாதஸ்வர இசை நிகழ்ச்சி,பக்தி சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து புதன்கிழமை சுவாமி அம்பு போடுதல் விழாவும்,வியாழக்கிழமை ஊஞ்சல் உற்சவ விழாவும் நடைபெற உள்ளது.