Nagaratharonline.com
 
ஆத்திரம்பட்டி-திருக்கோளக்குடிதார் ரோடு புதுப்பிக்க கோரிக்கை  Oct 21, 12
 
ஆத்திரம்பட்டியிலிருந்து திருக்கோளக்குடி செல்லும் ரோட்டை புதுப்பிக்க கிராம மக்கள் கோரியுள்ளனர்.ஆத்திரம்பட்டியிலிருந்து 2 கி.மீ.தூரத்திற்கு திருக்கோளக்குடிக்கு தார் ரோடு செல்கிறது. இந்த ரோட்டை ஆத்திரம்பட்டி, மின்னல்குடி, பூசாரிப்பட்டி, மந்திப்பட்டி கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர்.திருக்கோளக்குடி சென்று, புதுக்கோட்டை, திருமயம்,பொன்னமராவதி, சிங்கம்புணரி போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.தற்போது இந்த ரோட்டின் முதல் 1 கி.மீ.,மிகவும் பழுதடைந்து உள்ளது.

தற்போது மழை பெய்வதால் மேலும் இந்த ரோடு சீர்குலைந்து வருகிறது.இரு சக்கர வாகனங்களில் செல்வது கூட மிகவும் சிரமமாக உள்ளது. இந்த ரோட்டை புதுப்பித்துத் தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.