Nagaratharonline.com
 
உலக பாரம்பரிய சின்னமாகும் செட்டிநாடு வீடுகள்  Oct 15, 12
 
நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்த அருமையான பொக்கிஷம்தான் செட்டிநாடு வீடுகள். முற்றிலும் பர்மா தேக்கால் பார்த்துப் பார்த்து இழைத்து கட்டப்பட்ட அருமையான கலைப் பொக்கிஷங்கள் ஆகும். கடந்த காலத்தின் பாரம்பரியத்தை மெளனமாக இன்றளவும் நமக்கு சொல்லியபடி உள்ளன இந்த அரண்மனை வீடுகள்.

உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் செட்டிநாடு பங்களாக்கள், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா கூறியுள்ளார்.