Nagaratharonline.com
 
பாகனேரியில் பரவுது மர்மக்காய்ச்சல்:பலருக்கு பாதிப்பு  Oct 15, 12
 
பாகனேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள தாய்சேய் மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகமாக காணப்படுகிறது.ஒரு வாரமாக பலருக்கு காய்ச்சல் காணப்பட்டாலும்,சுகாதாரத்
துறையினர் எந்தவித தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.இங்குள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்ற பகுதிகளுக்கு பணிக்கு சென்றுவிட்டதால் இங்கு காய்ச்சல் வேகமாக பரவி
வருகிறது.இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு டாக்டர் பணியிடம் உள்ளது.ஆனால் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றுகிறார்.அவரையும் இந்த பகுதியில் எந்த சுகாதார நிலையத்திலாவது டாக்டர் விடுமுறையில் சென்றால் அங்கு அனுப்பி விடுகின்றனர்.

நேற்று பாகனேரி தாய்சேய் மருத்துவமனையிலிருந்து கல்லூரி மாணவி ஒருவர் தொடர்ந்து கடுமையான காய்ச்சல் காரணமாக சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து மர்மக்காய்ச்சல் பரவுவதை தடுக்க சிறப்பு டாக்டர் குழுவை அனுப்பி கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar