Nagaratharonline.com
 
கைவிட்டது காற்றாலை - 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு  Oct 12, 12
 
காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், ஏறத்தாழ 12 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து கடந்த இரு தினங்களாக 50 மெகாவாட் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. மேலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 200 மெகா வாட் உற்பத்தி செய்யும் ஐந்து அலகுகளில் ஒரு அலகு தற்போது பழுதாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகள் அனைத்திலும் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது