Nagaratharonline.com
 
கம்பன் எக்ஸ்பிரஸ் இனி தஞ்சை போகாது  Oct 11, 12
 
சென்னை எழும்பூர்-காரைக்கால் இடையே, கம்பன் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - கும்பகோணம்-தஞ்சை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், இன்று முதல் மயிலாடுதுறையிலிருந்து வழி மாற்றப்பட்டு பேரளம்-திருவாரூர் வழியாக காரைக்காலுக்கு இயக்கப்படுவதால், இனி தஞ்சை செல்லாது.

இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து வழி மாற்றி இயக்கப்படுவதால், இப்பாதையில் உள்ள பேரளம் ரயில் நிலையத்தில், இரு வழி மார்க்கத்திலும் மூன்று நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.