Nagaratharonline.com
 
அழ​கப்பா பல்​கலை.யில் கணித மேதை ராமா​னு​ஜம் பிறந்​த​நாள் கருத்​த​ரங்கு  Dec 23, 09
 
காரைக்​குடி,​​ டிச.​ 23:​ காரைக்​குடி அழ​கப்பா பல்​கலை.யில் கணி​தத்​துறை சார்​பில் கணித மேதை ராமா​னு​ஜம் பிறந்​த​நாள் விழா​வை​யொட்டி கருத்​த​ரங்​கம் நடை​பெற்​றது.​

​ ​ பல்​கலை.​ துணை​வேந்​தர் ப.​ ராம​சாமி தலைமை வகித்தார் அப்போது​ அவர் பேசியது​ பள்​ளிக் கல்வி முறை மாண​வர்​க​ளின் திற​மையை வெளிக்​கொ​ணர்​வ​தில்

அன்று சிறந்​து​வி​ளங்​கி​யது.​ அதே​போன்று இப்​போ​தும் பள்ளி,​​ கல்​லூரி மற்​றும் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மாண​வர்​க​ளின் திற​மை​யைக் வெளிக்​கொண்டு வரும் சாத​னங்​க​ளா​கத் திக​ழ​வேண்​டும்.​

அதன் மூலம் கணி​த​மேதை ராமா​னு​ஜ​ரைப் போன்று சிறந்த ஆராய்ச்​சி​யா​ளர்​களை நாம் உரு​வாக்​க​வேண்​டும் என்​றார்.​

​ ​ பலக்லை.​ தனி அலு​வ​லர் ம.​ செல்​வம்,​​ மதுரை காம​ரா​ஜர் பல்​கலை.​ பேரா​சி​ரி​யர் லெட்​சு​மி​நா​ரா​ய​ணன்,​​ புதுக்​கோட்டை மன்​னர் கல்​லூரி பேரா​சி​ரி​யர் வேத​மா​ணிக்​கம்,​​

அழ​கப்பா அரசு கலைக்​கல்​லூரி பேரா​சி​ரி​யர் செல்​லப்பா உள்​ளிட்​டோர் பேசி​னர்.​ ​

​ கருத்​த​ரங்​கில் அழ​கப்பா பல்​க​லைக்​க​ழ​கம் மற்​றும் தமி​ழக பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளைச் சேர்ந்த முது​கலை மற்​றும் ஆராய்ச்சி மாண​வர்​கள் தங்​க​ளது ஆய்​வுக்​கட்​டு​ரை​களை சமர்ப்​பிóத்​த​னர்.​ ​ ​பல்​கலை.​ கணி​தத்​து​றைத் தலை​வர் ஆர்.​ நட​ரா​ஜன் வர​வேற்​றார்.​ பேரா​சி​ரி​யர் என்.​ பழ​னி​யப்​பன் நன்றி கூறி​னார்.​

Source:Dinamani
Dec 23, 2009