Nagaratharonline.com
 
அரியக்குடி, பிள்ளையார்பட்டி கோயில்களில் ஆளுநர் சுவாமி தரிசனம்  Oct 9, 12
 
ஆளுநர் கே.ரோசய்யா தனது மனைவியுடன் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலிலும், பிள்ளை யார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோயிலிலும் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

மாலையில் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோயிலுக்கு ஆளுநர் தனது மனைவியுடன் சென்றார். அங்கு கோயில் அறங்காவலர்கள் லெட்சுமணன் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் கற்பக விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனைகளை ஆளுநர் தரிசனம் செய்தார்.

ஆளுநர் வருகையையொட்டி அரியக்குடி, பிள்ளையார்பட்டி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.