Nagaratharonline.com
 
கீழச்​சி​வல்​பட்டி: பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா  Dec 23, 09
 
திருப்​பத்​தூர்,​​ டிச.​ 23:​ -​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே உள்ள கீழச்​சி​வல்​பட்டி ஆர்.எம்.​ மெய்​யப்​பச் செட்​டி​யார் மெட்​ரிக்.​ பள்​ளி​யில் கிறிஸ்​து​மஸ் விழா நடை​பெற்​றது.​ ​

​ ​ ​ ​ விழா​வுக்கு கணக்​கன்​பட்டி தூய சவே​ரி​யார் ஆல​யப் பங்​குத்​தந்தை செல்​வ​ராஜ் தலைமை வகித்து,​​ குழந்​தை​க​ளுக்கு கிறிஸ்​து​மஸ் வாழத்​துக் கூறி​யும் ஏசு​வின் பிறப்​புப் பற்​றி​யும் கிறிஸ்​து​மஸ் தாத்​தா​வின் சேவை​கள் குறித்​தும் விளக்​க​ம​ளித்​தார்.​

​ ​ ​ கிறிஸ்​து​மஸ் தாத்தா அனைத்​துக் குழந்​தை​க​ளுக்​கும் இனிப்​பு​கள் வழங்​கி​னார்.​

​ ​ ​ முன்​ன​தாக,​​ பள்​ளித் தாளா​ளர் எஸ்.எம்.​ பழ​னி​யப்​பன் வர​வேற்​றார்.​ ஜான்​சன் சகோ​த​ரர்​கள் தலை​மை​யில் ஏசு குறித்த பாடல்​கள் பாடப்​பட்​டன.​

​ ​ பள்ளி முதல்​வர் குணா​ளன் நன்றி கூறி​னார்.​ ​

Source:Dinamani
Dec 23,2009