Nagaratharonline.com
 
கவியரசர் கண்ணதாசன் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம்  Sep 26, 12
 
காரைக்குடி, செப். 23: காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரவி.வீரப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் கவிஞர் அரு. நாகப்பன் வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அக்.7-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாட்டு, பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்துவது, அக்.14-ம் தேதி கண்ணதாசன் 23-ஆம் ஆண்டு விழா நடத்துவது, விழாவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர்.லெட்சுமணன், உயர் நீதிமன்ற நீதிபதி ராம.சுப்பிரமணியன், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் உள்பட பல பிரமுகர்களை அழைப்பது, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும், குமாரி ராணி மீனா முத்தையாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதுஎனவும் முடிவு செய்யப்பட்டது.