Nagaratharonline.com
 
NEWS REPORT: கோவிலூர் மடாலயம் வேண்டுகோள்  Sep 15, 12
 
கோவிலூர் மடாலயத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், விரிவாக்கம் நடைபெற்று வருவதை அடுத்து, இங்கு மாதக் கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில் தங்கி பணிபுரிய தன்னார்வத் தொண்டர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

ஓரளவுக்கு வேலை செய்ய முடியும் என்ற வகையில் உடல் நலமும், 70 வயதுக்கு மிகாமலும், குடும்பப் பொறுப்புகளற்ற, வருமானத்தை எதிர்பாராத, அர்ப்பணிப்பு மற்றும் தொண்டுள்ளம் கொண்ட ஆண்கள், தங்களைப் பற்றிய விவரங்களை எழுதி (பொருள்: தன்னார்வத் தொண்டு எனக் குறிப்பிட்டு) அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307, (வழி - மானகிரி), சிவகங்கை மாவட்டம், என்ற விலாசத்துக்கு விண்ணப்பிக்கலாம்.