Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் இன்று கொடியேற்றம்  Sep 11, 12
 
திருப்பத்தூர், செப். 9: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பத்து நாள் நடைபெறும் இப்பெருவிழாவை முன்னிட்டு தினசரி இரவு கற்பக விநாயகர் வீதி உலா நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை முதல் 8-ம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். செப்டம்பர் 18-ம் தேதி கற்பக மூர்த்தி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 19-ம் தேதி காலை விநாயகரின் சக்தி ஸ்தூலமான கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
தினமும் கலை நிகழ்ச்சிகள், இசை, பாடல், பட்டிமன்றம், நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருவிழா ஏற்பாட்டினை நிர்வாக அறங்காவலர்கள் காரைக்குடி லெட்சுமணன் செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.

Source:Dinamani