Nagaratharonline.com
 
காரைக்குடி நகர சிவன் கோவிலில் 1008 திருவிளக்குப் பூஜை  Sep 9, 12
 
அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா சேவா சமிதி மற்றும் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி சார்பில் காரைக்குடி நகர சிவன் கோவிலில் 11-ஆம் ஆண்டு ஆயிரத்தெட்டு திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராம. வள்ளியப்பன் அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் முத்து. பழனியப்பன், நகர சிவன் கோவில் அறங்காவலர் மகாதேவன் செட்டியார், வங்கி மேலாளர் மெய்யப்பன் ஆசிரமப் பிரநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.