Nagaratharonline.com
 
சேவுகன் கல்லூரியில் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை  Sep 9, 12
 
தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில், கோவிலூர் ஆதீனம் மடம் 12-வது பட்டம் நாச்சியப்ப சுவாமிகளின் முதலாவது குருபூஜை நடைபெற்றது.

இதை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில், முதுகலை கணிதத் துறை மாணவி சர்மிளாதேவி முதல் பரிசையும், மூன்றாமாண்டு கணிதத் துறை மாணவி சுகன்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை, கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி முதல்வர் அருணாச்சலம், இளைஞர் நலத்துறை அலுவலர் கண்மணி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.